காஷ்மீரில் 3 பொது மக்களை சுட்டுக் கொன்ற 2 பயங்கரவாதிகளை குறி வைத்து வீழ்த்தியது இராணுவம்!

காஷ்மீரில் 3 பொது மக்களை சுட்டுக் கொன்ற 2 பயங்கரவாதிகளை குறி வைத்து வீழ்த்தியது இராணுவம்!

Update: 2020-04-04 09:21 GMT

காஷ்மீரில் குல்காம் மாவட்டப்பகுதிகளில் தீவிர பந்தோபஸ்து காரணமாக சில காலங்களாக தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் எல்லைப்பகுதியில் சில தினங்களுக்கு முன் பொதுமக்கள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து காஷ்மீர் பாதுகாப்புப் படை அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், உளவுத் துறையினர் தந்த தகவல் அடிப்படையில் ஹார்ட்மண்ட் குரி கிராமத்துக்கு சென்ற பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் தங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

இந்த அதிரடி தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார். தொடர்ந்து இரு தரப்புக்கும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.   

Similar News