பங்களாதேஷில் அதிகரித்து வரும் இந்து சமூகத்தினர் மீதான தாக்குதல்கள்!

பங்களாதேஷில் அதிகரித்து வரும் இந்து சமூகத்தினர் மீதான தாக்குதல்கள்!

Update: 2021-02-25 09:37 GMT
பங்களாதேஷில் உள்ள இந்து சிறுபான்மையினர் மீது முஸ்லீம்கள் கண்மூடித்தனமாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக அதுபோன்ற தாக்குதலுக்குத் தினசரி கொடுமையாக நடந்து வருகின்றது. மேலும் அவர்கள் சிறுபான்மை மக்களைக் குறிவைத்து இதுபோன்ற தாக்குதல்களைச் செய்து வருகின்றனர். 

பங்களாதேஷில் மைமென்சிங் மாவட்டத்தில் வசித்து வரும் இந்து குடும்பத்தினரை முகமத் ஹபிஸுட்டின் தலைமையிலான முஸ்லீம் கும்பல் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்த கும்பல் பாதிக்கப்பட்ட குடும்பத்தை அந்த நிலத்திலிருந்து அகற்றும் நோக்கில் இந்த தாக்குதலைச் செய்துள்ளது. தாக்குதலில் அந்த குடும்பம் பலத்த காயமடைந்துள்ளது. மேலும் அந்த தாக்குதல் கும்பல் பெண்களைக் கூட விட்டுவைக்காமல் தாக்குதல் நடத்தியுள்ளது மற்றும் அவர்களின் வீடுகளையும் தாக்கியுள்ளது.
 
இதுபோன்று பல தாக்குதல்கள் இந்து சிறுபான்மையினர் மீது பல நடந்துள்ளது. அனைத்து வழக்கிலும் இஸ்லாமிய கும்பல் ஒரே உத்திகளையே பயன்படுத்தி வந்துள்ளது. இந்து சமூகத்தினரின் வீடுகளை எரிப்பது, அவர்களின் வழிபாட்டுத்தளங்களில் தாக்குதல்களை நடத்தி வந்துள்ளது. 

மேலும் இதுபோன்று தாக்குதல் நடத்தி வருவது பங்களாதேஷை இந்து சமூகமற்ற நாடாக மாற்றுவதே ஒரே நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் அவர்களின் சொத்துக்கள் மற்றும் நிலங்களைப் பறிமுதல் செய்து மற்றும் ஆக்கிரமித்துக் கொள்ளும் நோக்கிலும் உள்ளது. பங்களாதேஷில் உள்ள இந்துக்கள் அதிக ஆபத்தில் இருக்கின்றனர். 

Similar News