பால் விலை உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பால்விலை உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் பா ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-16 04:45 GMT

பால்விலை உயர்வு,மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு , ஆகியவற்றை கண்டித்து திருவாரூர் ரயில் நிலையம் முன்பு பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் அமுதா நாகேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மூத்த நிர்வாகி சந்திரன், தரவுத்தளம் மேலாண்மை பிரிவு மாவட்ட தலைவர் அருண், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் மாரிமுத்து, நகர பொதுச் செயலாளர் கோவை நடராஜன், நகர பொருளாளர் ரமேஷ், நகர துணை தலைவர் சேகர், நகர செயலாளர் ராஜா, பக்கிரிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


நீடாமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜனதா ஒன்றிய தலைவர் வாஞ்சி மோகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் சுப்பிரமணியன், கட்சி நிர்வாகிகள் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூத்தாநல்லூரில் பால்விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். கூத்தாநல்லூர் அருகே வடபாதிமங்கலத்தில் மன்னார்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரஷாந்த் தலைமையில் பா.ஜ.க கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோட்டூர் கடை வீதியில் பா.ஜனதா கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் அரவிந்த் தலைமை தாங்கினார்.


இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டூர் ராகவன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயக்குமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர். பால்விலை உயர்வை கண்டித்து மன்னார்குடி பந்தலடியில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் ரகுமான் தலைமை தாங்கினார்.இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன், மாவட்ட சிறுபான்மையணி தலைவர் கமாலுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.பா. ஜனதா நகர தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கணேசன், மற்றும் ரஜினி, கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க கட்சியினர் கலந்து கொண்ட தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.





 


Similar News