மத்திய பிரதேசத்தில் அமைக்கிறது பாஜகவின் அரசு!!

மத்திய பிரதேசத்தில் அமைக்கிறது பாஜகவின் அரசு!!

Update: 2019-10-14 10:03 GMT

சில மாதங்களுக்கு முன், கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைந்த சமயத்திலிருந்து மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி கூடிய விரைவில் கவிழ்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேச காங்கிரஸ் உள்கட்சியில் சில விரிசல்கள் இருப்பதாலும் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் மத்திய பிரதேசத்தில் ஜாபுவா தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடக்க உள்ளது.


மத்திய பிரதேசத்தில் உள்ள ஜாபுவா சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைவதற்கு ஒரு வாரம் மீதியுள்ள சமயத்தில், பாஜகவின் மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா ஞாயிற்றுக்கிழமை, பாஜகவின் வெற்றி கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் வீழ்ச்சியை உறுதி செய்யும் என்று கூறினார்.


"நீங்கள் எங்கள் பாஜக வேட்பாளரைத் தேர்ந்தெடுங்கள், மத்திய பிரதேசத்தை கமல்நாத் அரசாங்கத்திலிருந்து நாங்கள் விடுவிப்போம்" என்று பாஜக பொதுச் செயலாளர் ஜாபுவாவில் நடந்த தேர்தல் பேரணியில் கூறினார். "ஜாபுவா இடைத்தேர்தல் நாட்டின் அரசியலில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வரும். மத்திய பிரதேசத்தின் எதிர்காலத்தில் பெரிய பங்கு வகிக்கும். ” என்றும் விஜயவர்ஜியா கூறினார்.


இதனால் பொதுமக்களிடையே மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு கர்நாடகாவின் நிலைமை வரலாம் என்ற பேச்சுவார்த்தை மேலும் அதிகரித்துள்ளது.


Similar News