பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள் - பீதி அடைந்த மக்கள்! பரபரப்பு!

பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள் - பீதி அடைந்த மக்கள்! பரபரப்பு!

Update: 2020-04-07 12:10 GMT

புதுச்சேரி அருகே உள்ள முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட நைனார் மண்டபம் திவான் கண்ணப்ப முதலியார் நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் துப்புரவு பணியாளர்கள் அங்கு கொட்டப்பட்டு இருந்த குப்பைக்கு தீ வைத்தபோது திடீரென பயங்கர சட்டத்த்துடன் மர்ம பொருள் வெடித்தது, இந்த சத்தம் கேட்டவுடன் துப்புரவு பணியாளர்கள் தெறித்து ஓடினர்.


மேலும் சத்தத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் குப்பையில் வெடித்த மர்ம பொருள் பட்டாசு என்பது தெரியவந்தது பின்னர் பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்த போலீசார் பீதி அடைய வேண்டாம் என்றனர்.



Similar News