தி.மு.க படிவத்தில் தலைவிரித்தாடும் ஜாதிகள்! “இதுல பெரியார் மண்ணு; டீக்கடை பண்ணு” – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

தி.மு.க படிவத்தில் தலைவிரித்தாடும் ஜாதிகள்! “இதுல பெரியார் மண்ணு; டீக்கடை பண்ணு” – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

Update: 2019-12-18 09:17 GMT

தமிழர்களை ஏமாற்றியே ஆட்சியை பிடித்த கட்சி என்றால் அது திமுக தான். இலங்கை தமிழர்கள் நலன் பற்றி வாய் கூசாமல் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் திரும்பி பார்த்தால், இவர்கள் இலங்கை தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் வங்கக் கடலைவிட பெரிதாக இருக்கும்.


அனைத்துக்கும் சிகரமாக 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இன அழிப்பு போராட்டத்தில், காங்கிரசுடன் கைகோர்த்து நின்றது திமுக. அவர்கள் 1,75,000 அப்பாவி தமிழர்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்று புதைத்தார்.


விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், வயதான காலத்தில் நோயுற்று சிகிச்சைக்காக சென்னை வந்தார். விமானத்திலிருந்து கீழே இறங்ககூட அனுமதிக்காமல், வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பிய புண்ணியவான்கள்தான் திமுகவினர். ஆனால் இன்று இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.


இது ஒருபுறமிருக்க, அப்பாவி தலித் மக்களை வைத்து பிழைப்பு நடத்து வதில் திமுகவை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், இப்படியே பேசி பேசியே வயிறு வளர்ப்பவர்கள் இவர்கள்தான்.


“இது பெரியார் மண். இங்கு ஜாதிகளுக்கு இடமில்லை” என்றெல்லாம் வீர வசனம் பேசுவார்கள். தலித்துகளுக்காக போராடுகின்ற இயக்கம் திமுக என்பார்கள். ஆனால் ஆக்கப்பூர்வமாக அந்த மக்கள் முன்னேற்றத்திற்கு எதையும் செய்ய மாட்டார்கள். அவர்களை திமுகவின் ஓட்டு வங்கியாக பயன்படுத்துகின்றனர். இது தான் இவர்களின் உண்மை முகம்.


திமுகவின் ஜாதி ஒழிப்பு பித்தலாட்ட  முகத்திரை, மீண்டும் ஒருமுறை கிழிந்து உள்ளது.


நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பான திமுகவின் அதிகாரப்பூர்வ படிவத்தில், ஜாதியை குறிப்பிட தனி பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் இந்த பகுதியில், தாங்கள் என்ன ஜாதி என்பதை குறிப்பிட வேண்டும். இப்படித்தான் இவர்கள் ஜாதியை ஒழித்து வருகின்றனர்.


கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஊராட்சி மன்ற குழு உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் நபர்களின் படிவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் வேட்பாளர்கள் ஒவ்வொருவரின் ஜாதியும் மிகத் தெளிவாக குறிப்பிட்டு உள்ளது. ஒக்கிலிய கவுண்டர், கொங்கு வேளாள கவுண்டர், கவரா நாயுடு என்று ஒவ்வொருவரும் என்ன ஜாதி என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.




https://twitter.com/SuryahSG/status/1207134627699150849


திமுகவின் இந்த ஜாதி ஒழிப்பு பித்தலாட்டத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


“நல்லா ஒழிச்சீங்கய்யா ஜாதியை... இதுல பெரியார் மண்ணு டீகடை பண்ணுன்னு உன் உளறுவாயில வசனம் வேற பேசற...” என்று வறுதெடுத்துள்ளனர்.




https://twitter.com/kshatriyahindu/status/1207139666878533637

Similar News