ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சரும் சிதம்பரம் சிபிஐ.யால் கைது செய்யப்பட்டு , செப்டம்பர் 19 வரை திகார் சிறையில் தனியறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிதம்பரம் ஜாமீன் பெறுவதற்கு பெரும் முயற்சி எடுத்துவருகிறார். இந்தநிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்கிறார் சிதம்பரம். ஜாமீன் கேட்பதற்கு புது ரூட்டை தேர்வு செய்திருக்கின்றனர் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள்.
சிதம்பரத்திற்கு 9 வகையான நோய்கள் இருப்பதாகவும் வயது 74 எனவும் இதன் அடிப்படையில் ஜாமீன் வழங்குமாறு சிதம்பரம் தரப்பு திட்டம் தீட்டியுள்ளது. இந்த ஜாமின் மனு லீக் ஆகிவிட்டது
74 வயதாகும் சிதம்பரத்துக்கு டிஸ்லிபிடிமியா, கரோனரி தமனி நோய் , ஹைப்பர் டென்ஷன், கிளைசீமியா, எரிச்சல் கொண்ட குடல் நோய் , புரோஸ்டாடோமேகலீ,நுண்ணிய ஹெமாட்டூரியா, கிரோன் நோய் உள்ளிட்ட நோய்கள் சிதம்பரத்திற்கு இருப்பதாகவும் இதனால் ஜாமீன் தாருங்கள் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்து .
டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று இந்த மனு மீதான விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது