சீன அதிபரின் முகம் பதித்த தமிழக பட்டுச்சேலை!

சீன அதிபரின் முகம் பதித்த தமிழக பட்டுச்சேலை!

Update: 2019-10-12 07:39 GMT

பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகத்திற்கு வந்துள்ளார். சீன அதிபரின் வருகை வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. நேற்று மாமல்லபுரத்தில் இரு தலைவர்களும் கூடி சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாமல்லபுரத்தில் இருக்கும் சிற்பங்களை இருவரும் கண்டு ரசித்தனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளையும் ரசித்திருக்கிறார்கள் .தமிழகம் வந்து இருக்கும் சீன அதிபருக்கு தமிழக உணவுகள் பரிமாறப்பட்ட நிலையில் தமிழக அரசு சார்பாக நினைவு பரிசும் வழங்கப்பட்டது.


இன்று மீண்டும் பாரதப் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பிறகு கோளத்தில் தமிழ் படைப்புக்களை பார்வையிட்டனர். அப்பொழுது, சீன அதிபர் முகம் பதித்து நெய்யப்பட்ட பட்டு சேலையை அவருக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். அதை கண்டு சீன பிரதமர் வியப்படைந்தார் .


Photo Credits : News J


Similar News