ஆறடிக்கு ₹1.5 லட்சம் ரூபாய்- சாவில் கூட பேதம் பார்க்கும் கிறிஸ்தவ திருச்சபை.!
ஆறடிக்கு ₹1.5 லட்சம் ரூபாய்- சாவில் கூட பேதம் பார்க்கும் கிறிஸ்தவ திருச்சபை.!
ரியல் எஸ்டேட் மதிப்பு எகிறிக் கொண்டிருக்கும் நிலையில் கிறிஸ்தவ மதத்தில் இருக்கும் பல பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்க இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு பிரிவினரும் அவர்கள் செல்லும் சர்ச்சுக்கு கல்லைறையில் இடம் ஒதுக்க என்று குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும்.
மாதாமாதம் கட்ட வேண்டிய தசமபாகத்தையும் ஒழுங்காக செலுத்தினால் தான் கல்லறையில் இடம் ஒதுக்கப்படும். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் பாட்டி உயிரிழந்த போது இடம் பெயர்ந்ததால் கோவாவில் அவர் சென்று கொண்டிருந்த சர்ச்சுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்று அவரது உடலைப் புதைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது.
இத்தகைய மரபுகளை கிறிஸ்தவ பிரிவுகள் மிகத் தீவிரமாக கடைபிடிக்கின்றன. ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இன்னொரு பிரிவினரின் கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதி இல்லை. கோவிட்-19ஆல் ஏற்பட்ட உயிரிழப்புகளின் போது இந்த காரணத்தால் அடக்கம் செய்வதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டது. சென்னையில் மருத்துவர் சைமன் என்பவர் கோவிட்-19ஆல் உயிரிழந்த போது சி.எஸ்.ஐ சர்ச் அவரது உடலைப் புதைக்க விடவில்லை என்று பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் தற்போது கோவையில் இருக்கும் திருச்சபைகள் ஒன்றாகக் கூடி கொள்ளையில் ஈடுபடுவதாக அனைத்து கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. கோவை மீனா எஸ்டேட் அருகே பெரியார் நகரில் மாநகராட்சி கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பொதுவான கல்லறை தோட்டம் அமைக்க 3.7 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால் அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தை 'செயின்ட் மேரிஸ் ஆர்த்தடாக்ஸ் சர்ச்' திருச்சபை உரிமை கொண்டாடி கல்லறையில் இடம் ஒதுக்க அதிக விலை நிர்ணயிப்பதாகக் கூறப்படுகிறது. பணம் படைத்தவர்களிடம் அதிக அளவில் பணம் வசூல் செய்து கொண்டு உயிருடன் இருப்பவர்களுக்கு இடம் ஒதுக்குவதாக குற்றம் சாட்டப்படுகிறது.