இயேசு கிறிஸ்து வருகிறார். ஓரினச்சேர்க்கை சமுதாயத்தின் மொத்த அழிவுக்கும் வழிவகுக்கும் : நீதிமன்ற வளாகத்தில் பொங்கிய பாதிரியார்

இயேசு கிறிஸ்து வருகிறார். ஓரினச்சேர்க்கை சமுதாயத்தின் மொத்த அழிவுக்கும் வழிவகுக்கும் : நீதிமன்ற வளாகத்தில் பொங்கிய பாதிரியார்

Update: 2018-09-12 06:12 GMT



ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என சட்டப்பிரிவு 377 தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த சட்டப்பிரிவை நீக்கி உத்தரவிட்டது. இந்நிலையில், ஓரினச் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கிறிஸ்தவ பாதிரியாரான ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பெலிக்ஸ் ஜெபசிங் என்பவர் முழக்கங்களை எழுப்பினார்.



அப்போது, "பிரிவு 377 மீதான நீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவளிக்க வேண்டாம். இயேசு கிறிஸ்து வருகிறார். அவர் சீக்கிரம் இறங்கி வருகிறார். இந்த ஓரினச்சேர்க்கை சமுதாயத்தின் மொத்த அழிவுக்கும் வழிவகுக்கும். ஓரினச்சேர்க்கை பின்பற்றப்பட்டதால் தான் சோதோம் மற்றும் கொமோரா நகரங்களை தீ மற்றும் சல்பர் பயன்படுத்தி அழித்துவிட்டார் கடவுள். ஓரினச்சேர்க்கை ஆதரவு இல்லை", என்று கூச்சலிட ஆரம்பித்துவிட்டார்.



பின்னர், அவரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





Similar News