இந்துத்துவா ஏன் தேவைப்படுகிறது ? ஒரு வரலாற்று பார்வை.!
இந்துத்துவா ஏன் தேவைப்படுகிறது ? ஒரு வரலாற்று பார்வை.!
வரலாற்றின் எல்லா காலங்களிலும் மதங்கள் அது சார்ந்த நம்பிக்கைகள் தன்னை முன்னிருத்தி மற்றவற்றை ஆக்கிரமிக்கவே முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
எந்த ஒரு மத நம்பிக்கைகளையும் அது உருவான விதத்தையும், அது பயன்பாட்டில் இருக்கிற தன்மையையும் வைத்தே மதிப்பிட முடியும். மற்றபடி எல்லா மதங்களையும் சரிசமமாக ஒரே தராசில் வைத்து எடை போடுவது தவறு. வேத காலமாகிய கி.மு. 1500 முதல் 600 வரை பலவகையான வழிபாடுகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள் வேதங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது ஒரு நாளில் வந்ததல்ல, இந்த பலதரப்பட்ட நம்பிக்கைகளையும் வாழ்வியல் முறைகளையும் மாச்சர்யங்களற்று ஒருங்கிணந்து அரவணைக்கும் தன்மை கொண்ட ஒரு கலாச்சாரம் உருவாக பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டது.
இந்து மதத்தை பொருத்த வரை புதிய சிந்தனைகள், புதிய கருத்துக்கள் ஏன் வழக்கத்தில் இருக்கிர ஒரு கருத்திற்கு மாற்று கருத்துக்களை கூட அது அனுமதிக்கிறது. மற்ற மதங்கள் ஒரு கட்டிறுக்கத்தோடு இருந்து வருகையில் இந்து மதம் நெகிழ்வுத்தன்மையோடு பல மாற்றங்களை ஏற்றுக்கொண்டு மாறுகின்ற காலங்களுக்கும், சமூக மாற்றத்திற்கும் ஏற்றவாறு மக்களுக்கு பயனளிக்கிறது. காலத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளவில்லை என்றால் நல்லது கூட தீயதாகிவிடும் என்று ஒரு பழமொழி கூட உண்டு.
இங்கு முக்கியமாக எழும் கேள்வி ஒன்று தான். இத்தனை சிறப்பு வாய்ந்த இந்து மதம் ஏன் இந்திய துணை கண்ட த்தை தாண்டி விரிவடையாமல் போனது? அதற்கெல்லாம் மேலாக தன்னை காட்டிலும் வரலாற்றின் பிற்பகுதியில் தோன்றிய ( 1 முதல் 7 ஆம் நூற்றாண்டுவரை) மதங்களால் ஏன் அடிமைப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டது.
இதற்கு முக்கியமான காரணம் மற்ற மதங்கள் வெறும் கட்டுப்பாடுகளால் நிறைந்திருந்த வேளையில் இந்து மதம் கருத்து பரிமாற்றங்களுக்கு இடம் அளித்தது. மற்ற மதங்கள், "மதங்கள்" என்பதையும் தாண்டி மக்கள் மனதை ஆக்ரமித்து அடிபணிய வைக்கும் தன்மை கொண்தானதாக இருந்தது. மதங்கள் மதங்களாக மட்டுமில்லாமல் அரசியல் சாதனமாகவும் இருந்திருக்கிறது. இந்த புதிய மார்கங்கள் கொடூரமான வழிகளில் மத்திய கிழக்கு ஆசியாவில் அன்றைக்கு வழக்கத்தில் இருந்த "பாகான் " வழிபாட்டு முறைகளை அழித்து மெல்ல மெல்ல தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. அதன் பிறகு இந்து மதம் தழைத்து வளர்ந்து இந்திய துணைக்கண்டத்தின் பக்கம் அவர்கள் பார்வை திரும்பியது.