எங்களுக்குன்னே வருவீங்களாடா? கடுப்பான தி.மு.க தலைமை! அலறியடித்து புகார் குடுத்த ஆர்.எஸ்.பாரதி!

எங்களுக்குன்னே வருவீங்களாடா? கடுப்பான தி.மு.க தலைமை! அலறியடித்து புகார் குடுத்த ஆர்.எஸ்.பாரதி!

Update: 2020-06-19 02:31 GMT

தி.மு.க தலைமை ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள், மேலும் சில தி.க தலைவர்களின் பெயரில் துவங்கப்பட்ட கணக்குகள் ட்விட் செய்யப்பட்டு ரகளையான ட்விட்கள் பதிவேற்றப்பட்டதை அடுத்து என்ன செய்வதென்றே விழிபிதுங்கிய தி.மு.க கடைசியில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மூலம் போலீஸ்லி புகார் கொடுத்துள்ளது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, கனிமொழி, மறைந்ந திமுக தலைவர் கருணாநிதி, தயாநிநி மாறன், தருமபுரி எம்.பி செந்தில்குமார், திராவிடர் கழக தலைவர் வீரமணி, சுப.வீரபாண்டியன் ஆகியோர் பெயரில் துவங்கப்பட்ட போலி கணக்குகளில் இருந்து நகைச்சுவையாக ட்விட்கள் வர ஆரமித்தன. இதனால் இந்த கணக்குகளை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன.

ஆரம்பத்தில், கீ.வீரமணி பெயரில் உள்ள கணக்கில் இருந்து மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை பதிவேற்றி "சைனா நீ செத்தடா, தற்போது தளபதி களத்தில்"ன்னு ஆரமிக்கப்பட்ட ட்விட்டை உதயநிதியின் பெயரில் இருக்கும் கணக்கில் இருந்து மேலும் கிண்டல் செய்யும் விதமாக "வரான் பாரு" என்கின்ற சினிமா பாடலை குறிப்பிட்டு நகைச்சுவையாக ட்விட் செய்ய மேலும் இது பரவ ஆரமித்தது.

மேற்குறிப்பிட்ட ட்விட்கள் மிகுந்த நகைச்சுவையாக தெரிந்தாலும் தி.மு.க தலைமைக்கு இது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இது போலி என்று தெரியாமலேயே தி.மு.க கட்சிகாரர்களும் இதனை ரீட்விட் செய்தது தான் பிரச்சினையே. இதையடுத்து தி.மு.க ஐ.டி விங்கின் அசாத்திய "செயல்படாத" செயல்பாடுகளால் ஏற்கனவே கோபத்தில் இருக்கும் தி.மு.க-வின் கடுப்பில் இது மணிமகுட வைரமாய் ஏற ஆரமிக்கவே தி.மு.க கட்சி அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி'யை விட்டு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இந்த கணக்குகளை நீக்குமாறு புகார் அளித்துள்ளனர்.

இதுபற்றி கட்சியினர் வழக்கம்போல் உள்ளூர சிரித்தாலும் வெளியில் இது கண்டிக்கதக்க செயல் என்று கண்டனம் தெரிவிக்கின்றனர்.

Similar News