"என் அம்மா காத்திருக்கிறார்! விட்டுவிடுங்கள்" என்று கெஞ்சிய தலித் இளைஞரைக் கொன்ற கொடூரர்கள்
"என் அம்மா காத்திருக்கிறார்! விட்டுவிடுங்கள்" என்று கெஞ்சிய தலித் இளைஞரைக் கொன்ற கொடூரர்கள்
உத்திரப் பிரதேசத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் பணிக்குச் சென்று வீடு திரும்பும் வழியில் 25 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் சக பணியாளர்களின் மீது சந்தேகம் உள்ளதாக புகாரளித்திருந்த நிலையில் தற்போது உண்மையான கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
முகமது அதில், முகமது மொஹ்சின், மற்றும் முகமது சல்மான் ஆகிய மூவரையும் காசியாபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக காசியாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் நீரஜ் ஜடான் கூறியதாக ஸ்வராஜ்யா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மூவரில் மொஹ்சின் மீது ஏற்கனவே அலைபேசி திருட்டு, விலங்குகளைத் துன்புறுத்துதவ் உள்ளிட்ட குற்றங்களுக்காக காசியாபாத்தில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நீரஜ் கூறியுள்ளார்.
கொலையுண்ட விவேக் குமார் ஜாதவ் பட்டியலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் காசியாபாத் பாபு தாம் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் லைன் மேனாக பணியாற்றியுள்ளார். கொலையாளிகளைப் பிடிக்க மோப்ப நாய் லீனா உதவியுள்ளது.
விவேக்கின் தந்தை ராஜேந்திர குமார், "எனது மூன்று மகன்களில் விவேக் மீது தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். அவன் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக டெல்லியில் உள்ள அவனது அத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். எனது குழந்தைகளில் சிறந்த கல்வி அவனுக்கு மட்டும் தான் கிடைத்தது" என்று கூறியதாக ஸ்வராஜ்யா குறிப்பிட்டுள்ளது.
மேலும், "இப்போது தான் எங்களுடன் வாழ்ந்து குடும்பத்தின் நிலைமையை மேம்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான். இப்போது போய்விட்டான்" என்று விவசாயக் கூலியாக வேலை செய்யும் ராஜேந்திரன் வேதனையுடன் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.