கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வாட்ஸ் அப் குழு அமைப்பு : உதவி போலீஸ் கமிஷனரின் சீரிய தொண்டால் மகிழ்ச்சி.!
கொரோனா நோயாளிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் வாட்ஸ் அப் குழு அமைப்பு : உதவி போலீஸ் கமிஷனரின் சீரிய தொண்டால் மகிழ்ச்சி.!
சென்னையில் ஆயிரக்கணக்கான கொரோனா நோய்க்கு ஆளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் சொந்த தொடர்புகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மன அழுத்தம் உருவாகாத வகையில் " நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" என்பதை உணர்த்தி நம்பிக்கை, அறுதல் அளிக்கும் வகையில் ராயப்பேட்டை உதவி போலீஸ் கமிஷனர் எம்.எஸ்.பாஸ்கர் நூற்றுக்கணக்கான நோயாளிகளை இணைத்து புதிய வாட்ஸ்அப் குழு ஒன்றை நிறுவியுள்ளார்.
இது குறித்து அந்த மூத்த போலீஸ் அதிகாரி பாஸ்கர் கூறுகையில் "COVID-19 நோயாளிகளை நம்பிக்கை அளித்து உற்சாகப்படுத்தவே அதிகாரிகள் மற்றும் கோவித் எதிர்ப்பு குழு என்கிற பெயரில் இந்த குழுவை அமைத்ததாக கூறினார்.
மைலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் (டி.சி.பி) தேஷ்முக் சேகர், கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் அதிகாரிகள், சுகாதாரத் தொழிலாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கார்ப்பரேஷன் மருத்துவர்கள் உள்ளிட்ட மூத்த போலீஸ் அதிகாரிகள் இந்த குழுவின் முக்கிய உறுப்பினர்கள். இவர்களுடன் ராயப்பேட்டை மற்றும் ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 133 நோயாளிகளைக் கொண்டு இந்த குழு கடந்த ஜூன் – 1ந்தேதி உருவாக்கியுள்ளார்.
தனிமைப்படுத்தலின் போது சமூக உணர்வை உருவாக்குவதன் மூலமும், இரண்டு வார காலப்பகுதியில் அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதன் மூலமும் அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதே இந்த யோசனை என்று பாஸ்கர் விளக்கினார். இந்த செயல்பாட்டில் தனிமைப்படுத்தலை மீறுவதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் வைரசுக்கான நேர்மறை சோதனை செய்யும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பான நடைமுறைகள் குறித்து அவர்களை உணர வைக்க முடிகிறது என்றார்.