சுஷாந்த் சிங் தற்கொலை பற்றி சி.பி.ஐ. விசாரணை நடக்க வேண்டும் - உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நடிகை ரியா கோரிக்கை.!

சுஷாந்த் சிங் தற்கொலை பற்றி சி.பி.ஐ. விசாரணை நடக்க வேண்டும் - உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நடிகை ரியா கோரிக்கை.!

Update: 2020-07-16 13:19 GMT

எம்எஸ் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பையில் அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்திய திரை உலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு பல துறைகளில் இருப்பவர்கள் மறைவுக்கு அஞ்சலியை தெரிவித்துள்ளார்.

அந்த சமயத்தில் இருந்து அவருடைய தற்கொலைக்கான காரணத்தை பற்றி அறிவதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என அரசியல் பிரமுகர்கள், அவருடைய நண்பர்கள், நடிகர்கள், உறவினர்கள் ஆகியோர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் அவருடைய காதலியும் நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி தற்கொலை பற்றிய வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.




இதனைப் பற்றி ரியா ட்விட்டரில் கூறியது: மதிப்பிற்குரிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு வணக்கம். நான் சிங் ராஜ்புத்ஸின் காதலி சக்கரபோர்த்தி.அவர் உயிரிழந்து இப்போது ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. எனக்கு அரசாங்கத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது, இருப்பினும் நீதியின் நலனில், சிபிஐ விசாரணையைத் தொடங்குவதற்கு மடிந்த கைகளால் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.



அவரை தற்கொலை செய்ய தூண்டியதற்கு என்ன என்பது நான் புரிந்து கொள்ள விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.   

Similar News