கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் சுவாமி தூக்கும் பணியாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை!
கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் சுவாமி தூக்கும் பணியாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை!
கொரோனா வைரஸ் பரவலால் உலகமே ஸ்தம்பித்துப் போய் உள்ளது. இந்தியாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சிறிது சிறிதாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும் மக்களில் சில பிரிவினர் வாழ்வாதாரம் இன்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோவில் பணியாளர்கள் சாதாரண நாட்களிலேயே வருமானம் போதாமல் துன்புறுவது வழக்கம். இப்போது கொரோனா வைரஸ் பரவலால் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டு இருக்கும் நிலையில் 'ஸ்ரீ பாதம்" எனப்படும் சுவாமி தூக்கும் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே அவர்களது சார்பில் தமிழக முதல்வருக்கு பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பி உள்ளனர்.
திருக்கோயில் சுவாமி தூக்கும் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ள பத்து அம்ச கோரிக்கைகள் பின்வருமாறு,
1) தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களைத் திறக்க ஆவண செய்யதல்.
2) தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களில் உள்ள சுவாமி தூக்கும் பணியாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்துள்ளது என்பதை அறிந்து கொள்வது.
3) கடந்த நான்கு மாதங்களாக இந்த பணியை மட்டும் நம்பி உள்ள எங்களது குடும்பங்கள் பசியின் பிடியில் உள்ளன
4) இந்த சுவாமி தூக்கும் பணியானது இன்று தொடங்கிய பணி அல்ல. எங்களின் பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்து இப்பணியைச் செய்து வருகிறோம். இருந்தும் எங்கள் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
5) திருக்கோயில் நிர்வாகத்தினர் சுவாமி புறப்பாட்டின் போதும் அவர்களின் தேவைக்கு மட்டும் எங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். எங்கள் வாழ்வாதாரத்தைப் பற்றி அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.
6) தமிழக அரசு எங்கள் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு அந்தந்த திருக்கோயில்களில் நிரந்தர பணியமர்த்தவும் மாதாந்திர ஊதியம் வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.