விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள், பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு கூட்டணிக்குள் இருந்தே அழுத்தம்..சிவசேனாவின் மாற்றாந்தாய் மனப்பான்மை.!
விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள், பக்ரீத் கொண்டாட்டங்களுக்கு கூட்டணிக்குள் இருந்தே அழுத்தம்..சிவசேனாவின் மாற்றாந்தாய் மனப்பான்மை.!
சிவசேனா தலைமையிலான அரசு விநாயகர் சதுர்த்தி மற்றும் பக்ரீத் பண்டிகைக் கொண்டாட்ட விதிமுறைகளில் பாகுபாடு காட்டுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் 'கணபதி பப்பா மோரியா' என்ற விண்ணதிரும் கோஷத்துடன் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
பெரிய அளவிலான படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வித விதமான வடிவங்களில் விநாயகர் சிலையை வடிவமைத்து பந்தலிட்டு சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடி இறுதியில் கடலில் சென்று கரைப்பது வழக்கம். இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்று பரவலை காரணம் காட்டி சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு பல தடைகளையும் கடும் விதிமுறைகளையும் விதித்துள்ளது.
பொது வெளியில் வைக்கப்படும் சிலைகள் 4அடி உயரமே இருக்க வேண்டும்; வீட்டில் வைக்கும் சிலைகள் 2அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கடுமையான விதிகளை வகுத்துள்ளது.
மேலும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கும் நிகழ்வைத் தள்ளி வைக்குமாறும், அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் வரும் மாகி கணேச சதுர்த்தி அன்றோ அல்லது அடுத்த கணேச சதுர்த்தியின் போதோ சிலைகளைக் கரைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. பந்தல்கள் தாங்களாக முன்வந்து நன்கொடை அளிப்போரிடம் மட்டுமே நிதி உதவி பெற வேண்டும் என்றும், கூட்டத்தை ஈர்க்கும் என்பதால் விளம்பரம் செய்யக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆடல், பாடல் நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து அவற்றுக்கு பதிலாக இரத்த தான முகாம் மற்றும் மருத்துவ முகாம்களை நடத்தவும் கொரோனா வைரஸ், மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது. பந்தல்களில் பஜனைகள் உட்பட கலாச்சார நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இதற்குத் தான் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் உலோக அல்லது மார்பிளால் ஆன சிலைகளையே வழிபாட்டுக்கு பண்படுத்த வேண்டும் என்றும் அப்படியே களிமண் சிலைகள் வைக்கப்பட்டாலும் அவற்றை வீட்டிலேயேவோ அல்லது அருகில் உள்ள செயற்கை குளங்களிலோ மட்டுமே கரைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.