வாசுதேவ மேனன் படத்தில் இசையமைப்பது கடினமா? தயாராகிக் கொண்டிருக்கும் பாடகர் கார்த்திக்.!

வாசுதேவ மேனன் படத்தில் இசையமைப்பது கடினமா? தயாராகிக் கொண்டிருக்கும் பாடகர் கார்த்திக்.!

Update: 2020-07-17 13:02 GMT

பின்னணி பாடகரான கார்த்திக் "அரவான்" உள்ளிட்ட சில படங்களுக்கு இசை அமைத்து இசை அமைப்பாளராக மாறியுள்ளார். தற்போது இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் "ஜோஸ்வா இமைபோல் காக்க" என்ற திரைபடத்திற்கு இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் தற்போது பணியை தொடங்கி இருக்கும் நிலையில் இந்த லாக்டவுன் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று குறிப்பிடுகிறார். மேலும் அதனை தொடர்ந்து வாசுதேவ மேனன் படத்தில் இசையமைப்பது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த லாக்டோன் காலத்தில் அனைவரும் பயனுள்ள விஷயத்தை செய்ய வேண்டுமென்றும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர் நானும் இதை பயனுள்ளதாக மாற்றி கொண்டு இன்று மகிழ்ச்சியாக உள்ளேன் என்றார். எனவே தற்போது பணியை தொடங்கியுள்ள நிலைகள் இசையமைப்பது பெரிய சவாலாக இருந்த நிலையில் தற்போது மிகவும் ஈசியாக மாறியுள்ளது என மனம் திறந்துள்ளார் பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான கார்த்திக்.

Similar News