கிராமத்து சப்ஜெக்ட்டில் களமிறங்கும் அருண் விஜய் - வைரலாகும் புகைப்படம்.!
கிராமத்து சப்ஜெக்ட்டில் களமிறங்கும் அருண் விஜய் - வைரலாகும் புகைப்படம்.!
நடிகர் அருண்விஜய் தற்போது தமிழ் சினிமாவில் அதிகமாக படம் நடித்து வருகிறார். அந்த கதைகள் அனைத்தும் அவருக்கு ஏற்றாற்போல் அமைந்ததால் பல படங்கள் வெற்றிப் படமாகவும் அமைந்தது. அதனை அடுத்து அவர் கதை பிடித்திருந்தால் தனக்கேற்ற கதையாக இருந்தால் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். அதனை அடுத்து தற்போது இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் கிராமத்து சப்ஜெக்ட் ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் அருண் விஜய், மாபியா படத்தை அடுத்து தற்போது வா டீல் , அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத், பாஸ்கர் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து தற்பொழுது அஞ்சாதே 2ல் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன இந்த படத்தை மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகிறது என்று தெரியவந்துள்ளது.
"ஆம் மாஸ் ஆக்ஷன்" படங்களை இயக்கும் முன்னணி இயக்குனரான ஹரி இயக்கும் கிராமத்து சப்ஜெக்ட் ஒன்றில் அருண் விஜய் நடிக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஹரி அவர்கள் சூர்யாவின் அருவா படத்திற்கு முன்பு அருண்விஜய்யை வைத்து படத்தை எடுத்து முடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூப்பர் காம்பினேஷன் திரையில் ஹிட்டாகும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது அருண் விஐய் நடிக்கும் கதைகள் அனைத்தும் ஹிட்டாகி வருவதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.