வனிதா கண்ணீர் பேட்டி - அவர்கள் இருவரும் பேசுவதால் மன உளைச்சலுக்கு ஆளான வனிதா.!

வனிதா கண்ணீர் பேட்டி - அவர்கள் இருவரும் பேசுவதால் மன உளைச்சலுக்கு ஆளான வனிதா.!

Update: 2020-07-15 02:23 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயகுமார் அவர்களின் மகளான வனிதா சமீபத்தில் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை மணந்தார். இவரது திருமணம் குறித்து பலரும் விமர்சித்து வந்தனர். இதற்கு அவர்கள் பேசியதற்கு தனது யூடியூப் சேனலில் பதில் அளித்து வந்தார். மேலும் திருமணத்தை எதிர்த்து தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் போன்ற திரையுலகினரும் பேட்டி கொடுத்து வந்தனர். இவரைப் பற்றி சமூக வலைத்தளங்களிலும் அவதூறாக பேசி அவதூறான கருத்துக்களை பரப்பி வந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வனிதா சென்னை போரூா் எஸ்.ஆா்.எம்.சி. காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா்.

எனவே இவர் குறிப்பிட்ட நபர் மேல் புகார் அளித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் சூர்யா தேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் வனிதா விஜயகுமார். எனவே இவர் காவல்நிலையத்தில் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் அவர்களை அழைத்து வெளியே வர பயமாக இருக்கிறது என்றும் இணையத் துன்புறுத்தல் அதிகமாக உள்ளது. எனினும் இதற்கு நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். காவல்துறையினர்

இரு நாள்களில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றார்.

Similar News