உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் மத்திய பிரதேச ஆளுநராகவும் நியமனம்.!
உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் மத்திய பிரதேச ஆளுநராகவும் நியமனம்.!
உத்தரபிரதேச ஆளுநராக உள்ள ஆனந்திபென் படேல் மத்திய பிரதேச ஆளுநராகவும் நேற்று கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மத்தியபிரதேச தலைநகர் போபாலில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், அதிகாரிகள் முன்னிலையில் ஆனந்திபென் படேலுக்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய்குமார் மிட்டல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மத்தியபிரதேச ஆளுனர் லால்ஜி டாண்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அவரது ஆளுநர் பொறுப்பு உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார் ஆளுநர் மாளிகை செய்தி தொடர்பாளர்.