ஐபிஎல் தொடரில் விளையாட நியூசிலாந்து அணி வீரர்களுக்கு அனுமதி - நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.!

ஐபிஎல் தொடரில் விளையாட நியூசிலாந்து அணி வீரர்களுக்கு அனுமதி - நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.!

Update: 2020-07-24 12:32 GMT

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு நியூசிலாந்து அணி வீரர்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் என நியூசிலாந்து நாட்டின் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டியை செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது என ஐபிஎல் சேர்மன் பிரிஜோஷ் பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதற்கு நியூசிலாந்து அணி வீரர்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ஹைதராபாத் அணியிலும், ஃபெர்குசன் கொல்கத்தா அணியிலும், நீஷம் பஞ்சாப் அணியிலும், சாண்ட்னர் சென்னை அணியிலும், போல்ட் மற்றும் மெக்லனகன் மும்பை அணியிலும் ஐபில் போட்டியில் விளையாடுகின்றனர்.

இந்த 6 வீரர்களும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு அனுமதி கொடுக்கப்படும். அதில் கலந்து கொள்வதைப் பற்றி வீரர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் பூக் தெரிவித்துள்ளார்.  

Similar News