அருண் விஜய் படத்தில் தயாரிப்பாளரே வில்லன் ஆனார்.!

அருண் விஜய் படத்தில் தயாரிப்பாளரே வில்லன் ஆனார்.!

Update: 2020-07-03 06:36 GMT

அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு "பாக்ஸர்" என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இப்படத்தை வி.மதியழகன் தயாரித்து வருகிறார். இவன் நயன்தாரா நடித்த "கொலையுதிர் காலம்", மேலும் ஹன்சிகா நடிக்கும் "மஹா" என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்விகா சிங் நடிக்கிறார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் கனமாக இருப்பதால் டைரக்டர் விவேக் உதவி டைரக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். டைரக்டர் விவேக் இயக்குனர் மதியழகன் இதற்கு தகுந்த கேரக்டர் என முடிவு எடுத்துள்ளார்.

மதியழகன் இடம் இதைப்பற்றி கூறுகையில் அவர் இந்த படம் தொடங்கும்போது நான் வில்லனாக நடிப்பேன் என்ற திட்டம் எதுவுமில்லை கனமான அந்த வில்லன் வேடத்துக்கு பொருத்தமான நடிகரை தேடி வந்தோம். என்னை தேர்வு செய்தபோது தயங்கினேன்.

என்னை வைத்து சில காட்சிகளை படமாக்கி திரையிட்டு பார்த்தபோது பின்னர் தான் சம்மதம் சொன்னேன். அருண் விஜய்-யுடன் குத்துச்சண்டை போடும் வேடம் அல்ல அது. தன் இலக்கை அடைவதற்கு தடையாக இருக்கும் வித்தியாசமான வில்லன் வேடம். என்று வி.மதியழகன் கூறுகிறார்.

Similar News