ஜோதிட அறிவுரைகளை நம்பும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் விரைவில் டும் டும் டும்.!

ஜோதிட அறிவுரைகளை நம்பும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் விரைவில் டும் டும் டும்.!

Update: 2020-08-01 06:41 GMT

கொரோனா ஊரடங்கிற்கு முன்பு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல கோவில்கள் சென்று வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜோசியர் ஆலோசனைப்படி சில கோவில்களுக்கு சென்று வந்தனர். இந்த ஜோதிடர் தான் நயன்தாரா முன்னணி நடிகையாக வருவார் என முன்பதாக குறிப்பிட்டிருந்தாராம். அதனால் இவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் இவரை கேட்டுத்தான் முடிவுகளையும் எடுப்பார்கள் என கூறப்படுகிறது.

ஏனென்றால் நயன்தாராவிற்கு தோஷம் இருக்கிறதால் பல கோவில்களுக்கு சென்று அதனை நிவர்த்தி செய்துவிட்டு வந்தனர். இந்நிலையில் நயன்தாரா கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கோவிலுக்கு சென்று வந்தபின் தான் கல்யாணத்தைப் பற்றி யோசிக்க முடியும் என்று தெரிவித்திருந்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் பூட்டப்பட்டு இருப்பதினால் கொரோனாவிற்கு பிறகு கோவிலுக்கு சென்று வந்தபின் திருமணம் குறித்து தகவல் வெளியிட இருப்பதாக கூறி இருக்கின்றனர். ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

Similar News