அயோத்தி : பூமி பூஜையின் போது கூட்டம் கூடாமல் தொலைக்காட்சியில் கண்டுகளிக்குமாறு மக்களுக்கு யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்.!

அயோத்தி : பூமி பூஜையின் போது கூட்டம் கூடாமல் தொலைக்காட்சியில் கண்டுகளிக்குமாறு மக்களுக்கு யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்.!

Update: 2020-08-02 02:51 GMT

அயோத்தியில், வரலாற்றுச் சிறப்பு மிக்க ராமர் கோவிலின் பூமி பூஜைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளதாக, டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 5ல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் பூமி பூஜை விழாவில் மக்கள் கூட்டம் சேர வேண்டாமென்று முதலமைச்சர் ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை (31 ஜூலை) அன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பூமி பூஜை விழா முழுவதும் தொலைக்காட்சியில் நேரடி ஒளி பரப்பு செய்யப்படும்.,எனவே மக்கள் தொலைக்காட்சியில் கண்டுகளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் பக்தர்களை ஆகஸ்ட் 4 ,5 ஆகிய இரு தேதிகளில் அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி ராமாயணத்தை ஓதுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வேண்டுகோளை அவர் ராமர் ஜன்ம பூமியில் ஒரு பூசாரி மற்றும் அயோத்தியில் 12 பாதுகாவலர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மறுநாள் வெளியிட்டார்.

இந்த பூமி பூஜைக்குப் பிறகு தொடங்கவிருக்கும் கோவில் கட்டுமானம் பணிகள் உலகில் பலகோடி மக்களுக்கு மனநிறைவு தரும் தருணமாக இருக்குமென்று அவர் தெரிவித்தார்.



source: https://swarajyamag.com/insta/cm-yogi-appeals-people-to-watch-ram-temples-bhoomi-pujan-from-television-and-not-assemble-in-ayodhya

Similar News