மனிதர்களை கொல்ல சீன ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ்? திடுக்கிடும் தகவல்கள்!
மனிதர்களை கொல்ல சீன ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ்? திடுக்கிடும் தகவல்கள்!
இந்த கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து கசிந்து இருக்கலாம் என்று பல்வேறு வகையான ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உலகம் முழுவதும் பரவி பல லட்சம் பேரை மருத்துவமனையில் கிடக்கச் செய்துள்ள இந்த கொடிய வைரஸின் தோற்றம் குறித்த குழப்பமும் சந்தேகமும் பல்வேறு நாடுகளிடம் எழுந்துள்ள நிலையில் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ரஹ்மான் மாலிக் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டர்ரஸிடம் 7 குறிப்புகளுடன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் வைரஸ் தோன்றிய இடத்தின் புவி குறியீடு, முதலாவது நோய் தொற்று பாதித்த நபர், வைரஸின் தன்மை கண்டறிவது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
2002-ஆம் ஆண்டு சீனாவில் இருந்து துவங்கி உலக அளவில் பாதித்த சார்ஸ் கிருமி பரவலுக்கு பின்னர் நோய் தொற்று முன்னெச்சரிக்கை & கட்டுப்பாடு ஆய்வகம் பிரஞ்சு தொழில்நுட்பத்தில் 2004-ல் துவங்கப்பட்டது. தற்போது உலக நாடுகள் பார்வை இந்த வூகான் உயிரியல் பாதுகாப்பு ஆய்வகத்தை நோக்கி திரும்பி உள்ள நிலையில் அங்கு மற்றொரு இரண்டாவது ஆய்வகமாக வூகான் நகராட்சி நோய் தடுப்பு மையத்தில் (Wuhan Municipal Centre for Disease Control) இதே போன்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது வெளியாகியுள்ளது.
2004-ல் ஆய்வகத்தில் இருந்து சார்ஸ் கிருமி வெளி கசிந்து ஒருவர் பலியாக 9 பேர் பாதிக்கப்பட்டனர். இவ்விசயத்தில் சீன அரசு தவறை உறுதிப்படுத்தும் விதமாக 5 அதிகாரிகளை தண்டித்தது.
யுனான் மாகாண குன்மிங் குகைகளில் இருந்து ஆயிர கணக்கான குதிரைவாலி (Horseshoe) வௌவால்களை பிடித்து ஆராய்ச்சி செய்வதாகவும் குறிப்பாக 2011 ஏப்ரல் முதல் 2015 அக்டோபர் வரை மட்டும் 10 முறை வௌவால்களை பற்றி ஆராய்ச்சி செய்தது எனவும் தற்போது பரவி வரும் வைரஸ் கிருமி 2013-ல் வூகான் நுன்னுயிர் ஆய்வகத்தில் வௌவால்களை கொண்டு ஆராய்ச்சி செய்ததை போல் 96.2% ஒத்து இருப்பதாக உயரிபாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் எப்ரிகில் தெரிவித்தார்.