சித்திரைத் திருநாளில் அல்லவை உதிர்ந்து நல்லவை துளிர்க்கட்டும்!

சித்திரைத் திருநாளில் அல்லவை உதிர்ந்து நல்லவை துளிர்க்கட்டும்!

Update: 2020-04-13 13:10 GMT

சித்திரைத் திருநாளில் அல்லவை உதிர்ந்து நல்லவை துளிர்க்கட்டும்!

உதிர்தல் முடிந்து துளிர்த்தல் தொடங்குவதைக் குறிக்கும் சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. அந்த வகையில் சித்திரைத் திருநாள் நமக்கு வசந்தத்தை மட்டுமின்றி, வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவாகும்.

ஆனால், தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகும் இப்போது பெரும் துயரத்தையும், நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. அந்த நெருக்கடி வசந்தகாலத்தை கொண்டாட வேண்டிய மக்களை வறுமையில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை சோதிக்கும் அனைத்து துன்பங்களும் இலையுதிர்காலத்து இலைகளைப் போல விலக வேண்டும்; வசந்தகாலத்தில் புதிதாக துளிர்க்கும் இலைகள் மற்றும் புதிதாக மலரும் மலர்களைப் போல தமிழக மக்களின் வாழ்க்கையில் நன்மைகள் துளிர்த்து மலர வேண்டும்; அந்த விருப்பம் நிறைவேற வேண்டும்; தமிழ்நாட்டு மக்கள் அனைவர் வாழ்விலும் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் பொங்க உழைக்க இந்த சித்திரைத் திருநாளில் உறுதியேற்போம் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணிராமதாசு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

Similar News