தேசிய அந்தஸ்தை இழக்கும் இடதுசாரிகள்...நான்கு மாநிலங்களில் 6% வாக்குகளை கூட பெற முடியாததால் தேசிய அந்தஸ்து பறிபோனது!!

தேசிய அந்தஸ்தை இழக்கும் இடதுசாரிகள்...நான்கு மாநிலங்களில் 6% வாக்குகளை கூட பெற முடியாததால் தேசிய அந்தஸ்து பறிபோனது!!

Update: 2019-05-30 06:06 GMT

ஒரு அரசியல் கட்சி, தேசிய கட்சியாக இருக்க வேண்டுமானால், லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில் குறைந்தது 4 மாநிலங்களில் 6 சதவீத ஓட்டுகளை பெற்றிருக்க வேண்டும். மேலும் அக்கட்சிக்கு 4 லோக்சபா எம்.பி.,க்கள் இருக்க வேண்டும் என, 'தேர்தல் சின்னம் ஒதுக்கீட்டு சட்டம்- 1968' தெரிவிக்கின்றது.


இந்நிலையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கம்யூ., கட்சிக்கு 2 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. எனவே அக்கட்சி, தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து அக்கட்சியின் பொதுசெயலர் சுதாகர் ரெட்டி தெரிவித்ததாவது: இந்திய கம்யூ., தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில் கம்யூ.,க்கு செல்வாக்கு உள்ளதா என தேர்தல் கமிஷன் முடிவு செய்யும். எங்களுக்கு சாதகமாக முடிவு வரும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Similar News