நேபாள நாட்டு மசூதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா மனித குண்டுகள், இந்தியாவுக்கு அனுப்ப சதி திட்டம்.!

நேபாள நாட்டு மசூதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா மனித குண்டுகள், இந்தியாவுக்கு அனுப்ப சதி திட்டம்.!

Update: 2020-04-11 04:09 GMT

நேபாள நாட்டை சேர்ந்த ஜலீம் முக்கியா என்பவர், கொரோனா தொற்றியுள்ள மனிதர்களை நேபாளம் வழியாக இந்தியாவுக்கு அனுப்பி அவர்கள் மூலம் தொற்றுக்களை ஏற்படுத்தி இந்தியாவை கதிகலங்க செய்ய சதி திட்டம் தீட்டி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், S.S.B. காவல்படை தனது அறிக்கையில் கூறியுள்ளது.

பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்களை, ஊரடங்கு காலத்தில் நேபாள் வழியாக இந்தியாவுக்கு அனுப்ப இவ்வாறு திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை இஸ்லாமிய நாடுகளில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் ஆறு பாகிஸ்தானியர்கள், காத்மண்டு வழியாக நேபாளுக்கு வந்திருப்பதாகவும், அவர்கள் தற்போது நேபாளில் உள்ள மசூதிகள் மற்றும் மதரஸாக்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை படிப்படியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன் மூலம் இந்தியாவை நொடிக்க செய்வது இவரின் திட்டமாக இருக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை இது தொடர்பான விசாரணை பணிகளை முடுக்கியுள்ளதுடன் நேபாளத்தில் இருந்து இந்தியா வரும் அனைத்து பாதைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி நேபாள பிரதமருடன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Courtesy : Thanthi TV 

https://www.thanthitv.com/News/JustIn/2020/04/10191347/1244615/Plan-to-spread-Corona-in-India.vpf

Similar News