தாஜ் ஹோட்டலில் 6 தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி.!

தாஜ் ஹோட்டலில் 6 தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி.!

Update: 2020-04-12 12:58 GMT

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 17லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை இதுவரை 7ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதன் இடையே, இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகமாக 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மும்பையில் தான் அதிகமான பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது‌. கொரோனா வைரஸ் வார்டுகளில் பணி புரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஓய்வு எடுப்பதற்காக பல ஹோட்டல்கள் தாமாக முன்வந்து அறைகளை கொடுத்துள்ளனர். இந்நிலையில் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலிலும் மருத்துவர்கள் தங்கி இருந்தனர்.

இதனால் அந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் சில தொழிலாளர்களுக்கு அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டன. இவர்களை பரிசோதனை செய்தபின், 6 தொழிலாளர்களுக்கும் கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது. இவர்களுக்கு எப்படி இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது தெரிய வில்லை மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி உள்ளதாக தாஜ் ஹோட்டலின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2519961  

Similar News