தமிழகத்தில் 110 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு - அனைவருமே டெல்லி இஸ்லாம் மாநாட்டில் பங்கேற்றவர்கள்!

தமிழகத்தில் 110 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு கண்டுபிடிப்பு - அனைவருமே டெல்லி இஸ்லாம் மாநாட்டில் பங்கேற்றவர்கள்!

Update: 2020-04-01 13:02 GMT

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் 110பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே  டெல்லியில் நடந்த இஸ்லாம் வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில் 1,131 பேர் டெல்லியில் நிஜாமுதீனில் நடந்த வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பினர். அவர்களுள் 615 பேரை கண்டுபிடித்துவிட்டோம். இன்னும 516 பேரை இன்னும் கண்டறிய முடியவில்லை. தமிழகத்திலிருந்து அந்த டெல்லி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களாகவே முன்வந்து தெரிவித்தால் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும். சமூகப் பரவலையும் தடுக்கலாம் என்றார்.

இந்த நிலையில், "டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள் சிலர் தாமாக முன்வந்து தகவல் தெரிவித்துள்ளனர்". இன்று உறுதிசெய்யப்பட்ட 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.

Similar News