'தியா' ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி.!
'தியா' ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி.!
கடந்த பிப்ரவரி மாதம் கன்னடத்தில் வெளியான திரைப்படம் 'தியா'. அசோகா இயக்கத்தில், ப்ருத்வி, தீக்ஷித் ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் கடந்த மாதம் அமேசான் ப்ரைமில் வெளியானது. அப்படத்தினை பார்த்த பலரும் நல்ல விமர்சனம் தந்த நிலையில் அதை இந்தியா முழுவதும் பலரும் பார்த்து வருகின்றனர். கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவி வருவதாக அதன் தயாரிப்பாளரான கிருஷ்ண சைதன்யா தெரிவித்துள்ளார்.
இது வரை சுமார் 60 மேற்பட்டவர்களிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்துள்ளதாகவும், தெலுங்கு, இந்தி, தமிழ் என அனைத்து மொழிகளிலும் விரைவில் இப்படத்தின் ரீமேக் உரிமை விற்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இங்கு இப்படத்தினில் நடிக்க முன்னணி நடிகைகள் ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.