மாவட்ட ஊராட்சி வார்டு பதவிக்கு திமுகவில் ரூ.10 லட்சம் லஞ்சம்! - வைரலானது ஆதாரம்! மு.க.ஸ்டாலின் முகத்திரை கிழிந்தது!

மாவட்ட ஊராட்சி வார்டு பதவிக்கு திமுகவில் ரூ.10 லட்சம் லஞ்சம்! - வைரலானது ஆதாரம்! மு.க.ஸ்டாலின் முகத்திரை கிழிந்தது!

Update: 2019-12-14 10:09 GMT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தான் ஒரு மகா யோக்கியனின் மகன் என்பது போல காட்டிக்கொள்ள தொடர்ந்து முயற்சித்து தோல்வி அடைந்து வருகிறார்.


திமுக “ஊழலின் ஊற்றுக்கண்” என்பது தமிழ் கூறும் நல் உலகம் அறிந்த ஒன்று. கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன், இவர்களெல்லாம் இப்போதும் ஊழல் வழக்குகளில் அக்யூஸ்ட்கள்தான். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மீண்டும் திகார் ஜெயிலுக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளவர்கள்.


இதுவரை திமுகவினர் மற்றவர்களிடம் பணத்தை பறித்துதான் கேள்விப்பட்டு இருந்தோம். ஆனால் இப்போது திமுகவினரிடமே திமுக கொள்ளையடிப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஆலவயல் சுப்பையா. இவர் திமுக சார்பில் எம்எல்ஏ பதவிக்கும், சேர்மன் பதவிக்கும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.


தற்போது இவர் தனது மகன் எம்சிஏ பட்டதாரியான முரளிதரனுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சியின் 12-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக நேர்காணலும் முடிக்கப்பட்டுள்ளது.
விரைவில் திமுகவின் சார்பில் போட்டியிடும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது நிலையில், ஆலவயல் சுப்பையாவிடம் ரூ.10 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ரகுபதி. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆலவயல் சுப்பையா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.


அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது :


புதுக்கோட்டை மாவட்டம், மாவட்ட ஊராட்சி வார்டு எண் 12-க்கு எனது மகன் முரளிதரன் எம்சிஏ, விருப்ப மனு அளித்து, நேர்காணல் முடிக்கப்பட்டு சீட் அறிவிக்கும் தருவாயில், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் ரகுபதி, “ரூ.10 லட்சம் என்னிடம் பணம் கொடுத்தால் சீட்டு தருகிறேன். மற்ற தேர்தல் செலவுகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்.


நான் ஏற்கனவே எம்எல்ஏ, சேர்மன் ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றவன். எங்களுக்கு இம்மாதிரி டிமாண்ட் வைக்காமல், என் மகன் முரளிதரனுக்கு சீட் வழங்க உத்தரவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு அந்த கடிதத்தில், ஆலவயல் சுப்பையா குறிப்பிட்டு உள்ளார்.


இந்த கடித நகல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பேரதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.


மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படிதான் மாவட்ட செயலாளர்கள் இப்படி கட்சிகாரர்களிடமு லஞ்சம் கேட்கின்றனர் என்றும், திமுகவில் உண்மையாக உழைக்கின்ற தொண்டனுக்கு மரியாதை இல்லை என்றும் அவர்கள் புலம்பி வருகின்றனர். போஸ்டர் ஒட்டுபவன், தலைமுறை தலைமுறையாக போஸ்டர்தான் ஒட்ட வேண்டுமா என்றும் அவர்கள் குமுறுகின்றனர்.




Similar News