பேனர் கலாசாரத்தை கொண்டு வந்ததே இவங்கதான் : பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!!

பேனர் கலாசாரத்தை கொண்டு வந்ததே இவங்கதான் : பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!!

Update: 2019-09-16 07:55 GMT

தேமுதிகவின் முப்பெரும் விழா திருப்பூரில் நேற்று நடைபெற்றது. விழாவில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியது:


தமிழகத்தில் அண்மை காலமாக கொலைகள் அதிகரித்து வருகின்றன. திருட்டு, வழிப்பறி குற்றங்களை தடுக்க வேலைவாய்ப்பு ஒன்றே வழி.
எனவே, தமிழக அரசு தொழில் நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உடனடியாக செயல்படுத்தி இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும். சுங்க வரி என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் கட்டணக் கொள்ளை அடிக்கப்படுகிறது.
பேனர், கட் -அவுட் கலாசாரத்தை உருவாக்கியதே திமுக தான். இதனை இல்லையென ஸ்டாலினால் மறுக்க முடியுமா? தேமுதிக தொடங்கப்பட்ட பிறகு, திமுகவால் ஆட்சிக்கு வர இயலவில்லை என்று பிரேமலதா பேசினார்

Similar News