தா.கிருட்டிணன், லீலாவதி வரிசையில் உமா மகேஸ்வரி! தி.மு.க முன்னாள் பெண் மேயரை தி.மு.கவினரே கொலை செய்துள்ளனர்! தி.மு.க. கொலைகார கட்சி என்பது மீண்டும் நிரூபணம்!!
தா.கிருட்டிணன், லீலாவதி வரிசையில் உமா மகேஸ்வரி! தி.மு.க முன்னாள் பெண் மேயரை தி.மு.கவினரே கொலை செய்துள்ளனர்! தி.மு.க. கொலைகார கட்சி என்பது மீண்டும் நிரூபணம்!!
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர் முருக சங்கரனுடன் மேலப்பாளையம் என்ஜினீயர்ஸ் காலனியில் வசித்து வந்தார். கடந்த 23-ஆம் தேதி உமா மகேஸ்வரியின் வீட்டில் புகுந்த மர்மகும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றது. வீட்டில் இருந்த அவரது கணவர் முருகசங்கரன், வேலைக்கார பெண் மாரியம்மாள் ஆகியோரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
அரசியல் முன் விரோதம் காரணமாக தி.மு.க.வை சேர்ந்த பெண் பிரமுகரான சீனியம்மாள் ஆட்களை ஏவி இந்த கொலையை செய்திருக்கலாம் என்று பரபரப்பான தகவல்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
கொலை நடந்த அன்று அந்த பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான அழைப்புகளின் விவரங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
அதே நேரத்தில் உமா மகேஸ்வரியின் வீட்டருகே உள்ள ஒரு ஓட்டலில் பதிவான கேமரா காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலை பற்றி துப்பு துலங்கும் வகையில் போலீசுக்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தது.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் கொலை நடந்த அன்று சந்தேகப்படும் படியாக ஒரு கார் 2 முறை உமா மகேஸ்வரியின் வீட்டை கடந்து சென்றது தெரியவந்தது. இதனால் அந்த கார் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அந்த காரில் சென்றவர்கள் யார்? அது யாருடையது? என்பது பற்றி விசாரணை நடத்தினர்.
அந்த கார் தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகனான கார்த்திகேயனுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலையில் அவருக்கு நிச்சயம் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.