மாவட்ட செயலாளர்களை சமாதானபடுத்த நாளை மறுநாள் கூட்டம் தி.மு.க அறிவிப்பு #DMK #MKStalin

மாவட்ட செயலாளர்களை சமாதானபடுத்த நாளை மறுநாள் கூட்டம் தி.மு.க அறிவிப்பு #DMK #MKStalin

Update: 2020-07-28 08:49 GMT

தி.முக'வில் உட்கட்சி குழப்பங்கள் அதிகரித்துள்ள நிலையில் நாளை மறுநாள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்க ஏற்பாடு செய்யப்படிருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த கூட்டமானது நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும் கூட்டத்தில் என்றும் தி.மு.க. எம்.பி, எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க'வில் சமீப காலமாக குழப்பங்கள் அதிகரித்து வருகின்றன, கட்சி தலைமை வெளியில் ஒற்றுமையாக இருப்பதாக காட்டி கொண்டாலும் உள்ளே தனிதனியாக தங்கள் அதிகாரத்தை கோலோச்ச விரும்புபவர்களால் மிகுந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. கனிமொழியின் செயல்பாடுகள் தனியாக மக்களிடையே வரவேற்பை பெற்றதால் அதனை ஓவர்டேக் செய்ய உதயநிதி'யின் செயல்பாடுகள் இருக்கின்றன.

கட்சியின் முக்கிய தலைவராகிய துரைமுருகன் அன்பழகன் மறைவுக்கு பிறகு தம்மை பொது செயலாளர் பதவியில் இன்னும் அமர்த்தாமல் இருப்பதற்கு மிகுந்த அதிருப்தியில் உள்ளார், இது போக கட்சியின் மா.செ'க்கள் மற்றும் நிர்வாகிகள் ஐபேக் நிறுவனத்தின் தலையீடுகளால் மிகுந்த மனஉளைச்சல் மற்றும் ஏக கடுப்பில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தி.மு.க'வின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்களை சமாதானபடுத்தும் முயற்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் இந்த காணொலி கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News