திமுகவின் மாபெரும் சதித்திட்டம் அம்பலம்! - தவறை ஒப்புக்கொண்டது டைம்ஸ் ஆப் இந்தியா!
திமுகவின் மாபெரும் சதித்திட்டம் அம்பலம்! - தவறை ஒப்புக்கொண்டது டைம்ஸ் ஆப் இந்தியா!
பசுதைத் தாயகம் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அருள் ரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது:-
'பாமகவினர் பத்திரிகையை மிரட்டினார்கள்' என்கிற பொய்யான கோயபல்ஸ் செய்தியை உருவாக்கி, பிரசாந்த் கிஷோர் பாண்டே வியூகத்தின்படி, பலமுனை தாக்குதல் நடத்திய திமுக கும்பலின் சதி தகர்க்கப்பட்டுள்ளது.
இன்று வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் 'மருத்துவர் அன்புமணி இராமதாசின் குறித்து தாங்கள் வெளியிட்ட செய்தி தவறானது தான்' என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த பத்திரிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட கட்டுக்கதைகளை அந்த செய்தி நிறுவனம் ஏற்கவில்லை! இதன் மூலம் திமுக 200 ரூபாய் உபிஸ், 15 கோடி ரூபாய் பாலகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, சாதிவெறி போலி பத்திரிகையாளர்களின் முகத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை கரி பூசியுள்ளது.
பின்னணி என்ன? பிஹாரி பிராமணர் பிரசாந்த் கிஷோர் பாண்டேவின் Indian Political Action Committee (I-PAC) அமைப்பு, மு.க. ஸ்டாலினுடைய அதிகாரப்பூர்வ கார்ப்பரேட் ஆலோசனை அமைப்பாக பல கோடி ஊதியத்தில் பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து திமுகவின் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில் "சமூக வலைதளங்களில் பதிலடி கொடுப்பதற்கு, எங்களுக்கு I-PAC நிறுவனம் தேவைப்படுகிறது. விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி, கட்சி பணிகளையும் மாற்றிக் கொள்கிறோம். பிரசாந்த் கிஷோர், எங்களுக்கு வேலைக்காரர்; அவருக்கு நாங்கள் பணம் தருகிறோம்" என்று கூறினார்.
I-PAC நிறுவனம் பீஹார் தேர்தல், பஞ்சாப் தேர்தல், மணிப்பூர் தேர்தல், ஆந்திர தேர்தல் என பல இடங்களில் பணியாற்றிய போது, தான் பணியாற்றும் கட்சிக்கு எதிராக உள்ள தலைவர்கள் குறித்து அவதூறு செய்திகளை பரப்புவதை ஒரு முக்கியமான யுக்தியாக கையாண்டுள்ளது.
அதே போன்று, தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக உள்ள தலைவர்கள் குறித்து கட்டுக்கதைகளை பரப்புவதை ஒரு முக்கிய செயல்திட்டமாக முன்னெடுத்துள்ளதாக தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர். அதன் முதல் கட்டத்தை கீழ்க்கண்டவாறு அரங்கேற்றினர்: