ஒரு பக்கம் கொரோனாவுக்கு எதிரான போர், இன்னொரு பக்கம் இழந்த வாழ்வாதாரங்களை துணிச்சலுடன் மீட்கும் மோடி அரசு. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு.!
ஒரு பக்கம் கொரோனாவுக்கு எதிரான போர், இன்னொரு பக்கம் இழந்த வாழ்வாதாரங்களை துணிச்சலுடன் மீட்கும் மோடி அரசு. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு.!
கொரோனா தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு குடிமக்களை என்ன விலை கொடுத்தாகிலும் காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காக, ஊரடங்கு உத்தரவை இரண்டாம் கட்டமாக மேலும் 19 நாட்களுக்கு தள்ளிவைத்த பிரதமர் மோடியின் முடிவு மிகவும் துணிச்சலான முடிவு. இதனால் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்படும் நஷ்டங்கள் குறித்து அவருக்கு நன்றாக தெரியும், நாட்டின் பொருளாதாரம், வேலை வாய்ப்பு, மற்றும் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும் என்றாலும் கடினமான, இந்த பூட்டப்பட்ட ஊரடங்கு நிலையிலும் மிகவும் தைரியமாக மீண்டும் பொருளாதார இயல்பு நிலையை மீட்க மோடி அரசு சிறந்த திட்டங்களை வரும் 20 ந்தேதியில் இருந்து படிப்படியாக அமல்படுத்துவதை நிபுணர்கள் பாராட்டியுள்ளனர்.
ஒரு பக்கம் ஊரடங்கால் மக்கள் தங்கள் தினசரி வாழ்வாதாரத்தை இழந்து வரும் நிலையில் அதையும் சரி செய்ய வேண்டும், அதே சமயம் தினமும் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகையில் பொருளாதரத்தை மீண்டும் உயிர்த்தெழ நேற்று பிரதமர் மோடி அறிவித்த தளர்வு திட்டங்கள் பிரமாதமானவை என்று கூறுகின்றனர்.
►பிரதமர் மோடி அரசின் திட்டப்படி ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சு வேலை, மெக்கானிக் தொழில் செய்வோர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
► சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் தங்களது பணிகளைத் தொடரலாம். ஆனால், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.
► ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்குச் செல்லலாம். ஆனால் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்.
► விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி
► அதேசமயம் மே 3 ஆம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை தொடரும்.