கப்பலோடு வருவேன், இல்லையேல் கடலிலே இறப்பேன்! வா.ஊ.சி அவர்களின் வீரவரலாறு
கப்பலோடு வருவேன், இல்லையேல் கடலிலே இறப்பேன்! வா.ஊ.சி அவர்களின் வீரவரலாறு
இவருடைய பெயரை விடவும் இவருடைய பெயரின் முதல் எழுத்தக்கள் தான் அதிக பிரபலம். இவரை சுருக்கமாக "பிள்ளை" என்றும் அழைப்பதுண்டு ஆங்கிலேயர் காலத்திலேயே துணிச்சலாக சட்டம் பயின்றவர். இவர் பிறந்தது ஒட்டபிடாரத்தில். இவருடைய ஆறாம் வயதில் வீரப்பெருமாள் என்பவரிடம் தமிழ் பயின்றார். தன் பாட்டியிடம் பல "சிவன்" கதைகளை கேட்டும், தாத்தாவிடம் "ராமாயணம்" கேட்டும் வளர்ந்த குழந்தை இவர். இவருக்கு குழந்தை பருவம் முதலே விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் உண்டு கபடி, குதிரை சவாரி, நீச்சல், சிலம்பம் என அனைத்து விளையாட்டுகளிலும் அதீத ஆர்வம் காட்டுவாராம்.
அவருடைய வீட்டின் அருகாமையில் தாலுக்கா அதிகாரியாக இருந்த கிருஷ்ணன் என்பவரிடம் தினசரி மாலை ஆங்கிலம் பயில்வார். அவர் வேறு ஊருக்கு மாற்றலாகி போகவும், பிள்ளை அவர்களின் தந்தை கிராமவாசிகளின் உதவியுடன் ஒரு பள்ளியை கட்டி, அப்பள்ளிக்கு எட்டயபுரத்தை சேர்ந்த "அறம்வளர்த்தானந்தா பிள்ளை" என்பவரை ஆங்கில ஆசிரியராக நியமித்தார். பதினான்கு வயதில் தூத்துகுடியில் தன் உயர்கல்வியை தொடர்ந்தார் பிள்ளை.
சட்டம் படிப்பதற்க்கு முன்பும் சிறிது காலம் தாலுக்கா அலுவலகத்தில் கிளர்க்காகவும் பணியாற்றினார். சில காலங்களுக்கு பின்பு அவர் சென்னையில் "ராமகிருஷ்ணானந்தர்" என்ற துறவியை சந்தித்தார் இவர் சுவாமி விவேகானந்தா அஸ்ரமத்தை சேர்ந்தவர். "நாட்டுக்காக எதாவது ஒரு தியாகத்தை செய்ய வேண்டும்" என்று பொருள்படும் விதமாக "பிள்ளை" அவர்களுக்கு அவர் வழங்கிய அறிவுரை பின்னாளில் பெரும் வரலாற்றையே ஏற்படுத்த காரணமாய் அமைந்தது. அந்த சமயத்தில் தான் பிள்ளை அவர்களுக்கு மகாகவி பாரதியின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகம் கிடைத்த நாள் முதல் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் ஆங்கிலேயர்களுக்கு வேண்டாதவர்களாகவும் ஆகிப்போனார்கள்.
எந்த வித போட்டியும் இல்லாமல் தனியாக ஆட்சி செலுத்தி வந்தது பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம். அதை எதிர்த்து அக்டோபர் 1906 ஆம் ஆண்டு சுவதேசி கப்பல் நிறுவனத்தை பதிவு செய்தார் பிள்ளை, அந்நிறுவனத்தின் மொத்த முதலீடு அன்றைய தேதியிலேயே 10 இலட்சம் ரூபாய். அதை மொத்தம் 40000 பங்குகளாக பிரித்தார்கள். ஒரு பங்கின் மதிப்பு ரூ.25. ஆசியாவை சேர்ந்த யார் ஒருவரும் பங்குதாரர் ஆகலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் இயக்குனராக இருந்தவர் திரு, பாண்டித்தேவர், ஜமீன்தார் மற்றும் "மதுரை தமிழ் சங்கத்தின்" தலைவர். அந்த சமயத்தில் ஜனாப் ஹாஜி முகமத் என்பவர் 8000 பங்குகளை 2 இலட்சம் கொடுத்து வாங்கினார் அது தான் நிறுவனத்தின் முதல் முதலீடு.