கொரோனாவுக்கு எதிராக போராடும் தூய்மை பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கிய தமிழக அமைச்சர்!
கொரோனாவுக்கு எதிராக போராடும் தூய்மை பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கிய தமிழக அமைச்சர்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதில் தமிழ்நாடு அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருமங்கலம் தொகுதியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் ஆர் பி உதயகுமார்.
திருமங்கலம் அருகே இருக்கும் கப்பலூர், மேலக்கோட்டை, ஆலம்பாடி உள்பட பகுதிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் ஒரு துப்புரவு பணியாளர் காலில் விழுந்து வழங்கினார் அமைச்சர் ஆர் பி உதயகுமார். இந்த சம்பவம் அங்கு இருந்த அனைவரையும் மகிழ வைத்தது.
Source: Thanthi TV