அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஒரு கோடி பேருக்கு வீடுகள் - நனவான மக்களின் கனவு : பிரதமரின் அதிரடி அறிவிப்பு.!
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஒரு கோடி பேருக்கு வீடுகள் - நனவான மக்களின் கனவு : பிரதமரின் அதிரடி அறிவிப்பு.!
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு கோடி பேருக்கு அடுத்த ஆண்டு முதல் சொந்த வீடுகள் வழங்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான எந்த ஒரு பணியும் தங்கு தடையின்றி நடைபெறும் என்றும், அனைவருக்கும் வீடு என்ற கனவுத் திட்டம் நிறைவேறும் என்றும், பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்க வழி செய்யப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டின் மூன்று நான்கு மாதங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டும் பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா :
சொந்த வீடு என்பது மனித வாழ்க்கையில் பெருங்கனவு. அதிக வருவாய் ஈட்டுவோருக்கு அந்தக் கனவு எளிதாக நிறைவேறிவிடும். நடுத்தர குடும்பத்தினர் வங்கிகளில் கடன் வாங்கி சொந்த வீட்டுக் கனவை நனவாக்கிக்கொள்வார்கள். ஏழை மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்குச் சொந்த வீடு என்பதெல்லாம் பெரும்பாலும் கானல் நீர்தான்.
தற்போது மத்திய அரசு 2022-ம் ஆண்டுக்குள் எல்லோருக்கும் வீடு என்ற
திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில்
நலிந்த பிரிவினரும்கூட வீடு கட்ட முடியும் என்று கூறுகிறார்கள். ‘பிரதான்
மந்திரி ஆவாஸ் யோஜனா’ (பிரதம மந்திரி குடியிருப்புக் கட்டும் திட்டம்) என்ற
பெயரில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் சொல்வது என்ன?