சிரஞ்சீவிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்!!

சிரஞ்சீவிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்!!

Update: 2019-10-10 05:33 GMT

கடந்த மாதம் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் இதனையடுத்து பல தலைவர்கள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு நேரில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தெலுங்கு பட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சென்ற வாரம் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அந்த சந்திப்பின் போது தெலுங்கானா மாநிலம் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது சிரஞ்சீவி நடித்து வெளிவந்த படமான சைரா நரசிம்ம ரெட்டி படத்தை பார்க்குமாறு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்டு கொண்டார்.


இதனை தொடர்ந்து சிரஞ்சீவியுடன் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனின் குடும்பத்தார் அனைவரும் சைரா நரசிம்மரின் படத்தை பார்த்துள்ளனர்.


படத்தைப் பார்த்துவிட்டு தமிழிசை சவுந்தரராஜன், சிரஞ்சீவி அவர்களை பாராட்டி தள்ளினார்.
சுதந்திரப் போராட்டத்தில் தென்னிந்திய பங்களிப்பு நன்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.
யுயலவாடா நரசிம்ம ரெட்டியின் நம்பகமான போர்வீரராக தமிழ் ராஜ பாண்டி கதாபாத்திரம் தமிழ் மற்றும் தெலுங்கு சகோதரத்துவத்தை உணர்த்துகிறது,ஒரு அற்புதமான படம், ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டும்.என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.


இது சிரஞ்சீவிக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.


Similar News