நீங்கள் செய்யும் வேலையை காப்பீடு செய்ய முடியுமா? வேலையே போனாலும் ஒரு வருடம் கவலைப்பட தேவையில்லையாம் - பலரும் அறியா அரசின் அற்புத திட்டம்!
நீங்கள் செய்யும் வேலையை காப்பீடு செய்ய முடியுமா? வேலையே போனாலும் ஒரு வருடம் கவலைப்பட தேவையில்லையாம் - பலரும் அறியா அரசின் அற்புத திட்டம்!
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவில் ஏராளமான நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. நெருக்கடியை சமாளிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் ஊழியர்களை வெளியேற்றுவதாகவும், சம்பளத்தைக் குறைப்பதாகவும் பல்வேறு நிறுவனங்கள் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. உங்களது மாதாந்தர வருமானம் திடீரென இல்லாமல்போனால் நீங்கள் மோசமான நெருக்கடியில் தள்ளப்படுவதற்கான வாய்ப்புண்டு.
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இதுபோன்ற சூழலில் திடீரெனத் தோன்றிய கொரோனா வைரஸ் இருக்கும் வேலைவாய்ப்புகளையும் பறித்துவிட்டது. வேலையை இழந்து வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் ஊழியர்கள் பலர் அடுத்து வேலை கிடைக்குமோ இல்லையோ என்ற அச்சத்தில் வாடுகின்றனர்.
எனவே கொரோனா போன்ற மாபெரும் பேரழிவுகள் ஏற்படும்போது வேலையை இழப்போருக்கு ஆதரவாகக் காப்பீட்டுத் திட்டம் ஏதேனும் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமாக எழுந்தன. இதைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு அது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இதை எவ்வாறு செயல்படுத்துவது என்று காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு வாரியம் மற்றும் பொது காப்பீட்டு கவுன்சில் ஆகிய இரண்டு அமைப்புகளிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
கொரோனா போன்ற பேரழிவுகள், இயற்கைப் பேரிடர்கள், மாபெரும் பொருளாதார மாற்றம் போன்ற சமயங்களில் வேலையை இழப்போருக்கு உத்தரவாதத்துடன் ஊதியம் அல்லது காப்பீடு வழங்க இத்திட்டம் வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வேலையை இழந்தோருக்கான காப்பீடு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகம் ஆகிய அமைப்புகள் மூலமாக வழங்கப்படும் எனவும், வேலையை இழந்தோருக்கு ஆறு மாதங்களுக்குக் காப்பீடு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.