மத்தியபிரதேசத்தில் மீண்டும் ஒரு ஹிந்து அமைப்பு தலைவர் சுட்டுக்கொலை!! பல்வேறு பகுதிகளில் பதட்டம்!!

மத்தியபிரதேசத்தில் மீண்டும் ஒரு ஹிந்து அமைப்பு தலைவர் சுட்டுக்கொலை!! பல்வேறு பகுதிகளில் பதட்டம்!!

Update: 2019-10-10 04:57 GMT


சென்ற 2 மாதங்களில் மட்டும் மத்தியபிரதேச மாநிலத்தில் 2 இந்துத்வா தலைவர்கள் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.


மத்திய பிரதேச மாநிலம் மான்ட்சவூர் பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களில் ஒருவர் யுவராஜ் சிங் சவுகான். இவர் இந்த பகுதியின் கேபிள் நெட்வொர்க் ஆபரேட்டராகவும் இருந்து வருகிறார். நேற்று காலை இவர் மின் கட்டணம் கட்டுவதற்காக அபிநந்தன் சவுக் அருகே உள்ள ஒரு தேநீர் கடையின் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்து அவர் மீது நடத்திய துப்பாக்கி சூட்டால் அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.


மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறினாலும் இந்த சம்பவத்தால் அந்த மாவட்டத்தில் நேற்று முதல் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் வன்முறைகள் ஏற்படலாம் என்பதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  


காவல்துறையினர் புலனாய்வு விசாரணையைத் தொடங்கியுள்ளனர், முதற்கட்ட தகவல்களின்படி, யுவராஜைக் கொல்வதற்கான உண்மையான நோக்கம் இன்னும் கண்டு[ பிடிக்கப்படவில்லை என போலீசார் கூறினாலும் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டதிலிருந்தே இந்துத்வா ஆதரவாளர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுவருவதாகவும், போலீஸ் விசாரணை பின்தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


கடந்த 2 மாதங்களில் கொல்லப்பட்ட 2 வது இந்துத்வா செயற்பாட்டாளர் யுவராஜ்சிங் என்பது குறிப்பிடத்தக்கது.


This is a Translated Article From OP INDIA


Similar News