இந்து - முஸ்லிம் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் முகநூலில் பதிவிட்ட கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி மீண்டும் கைது !!

இந்து - முஸ்லிம் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் முகநூலில் பதிவிட்ட கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி மீண்டும் கைது !!

Update: 2019-06-28 07:33 GMT


கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த முகமது யூசுப் என்பவன், இந்து - முஸ்லாமிய மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் முகநூலில் பதிவிட்டுள்ளான். மேலும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சிறையிலுள்ள அல் உம்மா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி பாஷாவுக்கு ஆதரவாகவும் பதிவிட்டுள்ளான்.





இதனால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேஸ்புக்கில் பதிவிட்ட முகமது யூசுப் மீது குனியமுத்தூர் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவனை கைது செய்தனர். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


மேலும் அவனது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.  முகமது யூசுப் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பாக சிறை சென்று வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News