விசா இல்லாமலேயே இந்தியர்கள் பாகிஸ்தானுக்குள் நுழையும் வழி - பிரதமர் மோடியின் முயற்சியினால் சாத்தியமான கர்தார்பூர் விரைவுச் சாலை.!

விசா இல்லாமலேயே இந்தியர்கள் பாகிஸ்தானுக்குள் நுழையும் வழி - பிரதமர் மோடியின் முயற்சியினால் சாத்தியமான கர்தார்பூர் விரைவுச் சாலை.!

Update: 2019-11-08 14:31 GMT

பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில், கர்தார்பூர் விரைவுச் சாலையில் தேரா பாபா நானக்கில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை நாளை திறந்து வைக்கிறார்.


ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி தொடங்கப்படுவதால், இந்திய யாத்ரீகர்கள் பாகிஸ்தானில் உள்ள குருத்துவாரா கர்தார்பூர் சாஹிப்புக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள வழி ஏற்படும்.சர்வதேச எல்லையான தேரா பாபா நானக்கில், கர்தார்பூர் விரைவுச் சாலையைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்த பாகிஸ்தானுடனான ஒப்பந்தத்தில் இந்தியா 2019 அக்டோபர் 24-ம் தேதி கையெழுத்திட்டுள்ளது.


வரலாற்றுச் சிறப்புமிக்க குருநானக் தேவ்ஜியின் 550-வது பிறந்த நாளை, மிகச்சிறப்பான முறையில் நாடு முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொண்டாடுவதற்கு 2018-ஆம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது நினைவு கூரத்தக்கது.


கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பாசாகிப்புக்கு ஆண்டு முழுவதும் இந்திய யாத்ரீகர்கள் எளிய மற்றும் சுமூகமான முறையில் சென்று வருவதற்காக, தேரா பாபா நானக்-கிலிருந்து சர்வதேச எல்லை வரை கர்த்தார்பூர் சாகிப் விரைவுச் சாலையை அமைத்து மேம்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.


ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் :


1. அனைத்து மத நம்பிக்கைக் கொண்ட இந்திய யாத்ரீகர்கள், இந்திய வம்சாவழியினர் இந்தச் சாலையைப் பயன்படுத்தலாம்.
2. இதில் பயணிக்க விசா தேவையில்லை
3. செல்லத்தக்க பாஸ்போர்ட்டை மட்டும் பயணிகள் கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.
4. இந்திய வம்சாவழியினர் பாஸ்போர்ட்டுடன் தங்கள் ஓசிஐ அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும்
5. சாலை, காலை முதல் மாலை வரை திறந்திருக்கும். காலையில் செல்லும் பயணிகள் அதே நாளில் திரும்பிவிட வேண்டும்
6. அறிவிக்கப்பட்ட நாட்களைத் தவிர சாலை ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். மூடும் நாட்கள் முன்பே அறிவிக்கப்படும்
7. பயணிகள் தனியாகவோ அல்லது குழுவாகவோ பயணிக்கலாம். நடந்தும் பயணம் மேற்கொள்ளலாம்.
8. பயண நாளுக்கு பத்து நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தானுக்கு, பயணிகளின் பட்டியலை இந்தியா அனுப்பும். பயணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக பயணம் உறுதி செய்யப்படும்.
9. இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்காக போதுமான அளவுக்கு உணவு மற்றும் பிரசாதம் வழங்க பாகிஸ்தான் தரப்பு உறுதியளித்துள்ளது.


Similar News