பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் தடையின்றி தொடரும் - அமித்ஷா!

பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் தடையின்றி தொடரும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

Update: 2024-05-15 18:03 GMT

பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி பயணம் தடையின்றி தொடரும் என்றும் வாரணாசி மக்கள் அவருக்கு மீண்டும் ஒரு சாதனை வித்தியாசத்தில் வெற்றி பெற ஆசீர்வதிப்பார்கள் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

வாரணாசி மக்களவைத் தொகுதியில் மூன்றாவது முறையாக மீண்டும் வெற்றி பெறும் நோக்கில் பிரதமர் மோடி நேற்று மனு தாக்கல் செய்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இதுகுறித்து அமித்ஷா தனது எக்ஸ்பிரகத்தில் கூறியிருப்பதாவது:-

இந்திய கலாச்சாரத்தின் மையமான பாபா விஸ்வநாத்தின் நகரமான காசியில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த 'யஷஸ்வி' பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பத்து ஆண்டுகளில் காசிக்கு உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சியை மோடிக்கொண்டு வந்துள்ளார். அவர் இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தையும் மேம்படுத்தியுள்ளார்.

மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பெருமைக்கான பயணம் தடை இன்றி தொடர பாபா விஸ்வநாத் மற்றும் கங்கா 'மையா' ஆகியோரை நான் பிரார்த்திக்கிறேன். இந்த முறையும் காசி மக்கள் மோடியை சாதனைக்குரிய வித்தியாசத்தில் வெற்றி பெற ஆசிர்வதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :Dinaseithi

Similar News