சபரிமலை வழக்கில் சிதைவுற்ற நீதியில் தனித்து நிற்கும் நாயகி நீதிபதி இந்து மல்ஹோத்ரா!
சபரிமலை வழக்கில் சிதைவுற்ற நீதியில் தனித்து நிற்கும் நாயகி நீதிபதி இந்து மல்ஹோத்ரா!
சபரிமலை கோவிலுக்குள் நுழைய 10 முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்ககளுக்கான கதவை முரண்மிகுந்த தீர்ப்பின் மூலம் திறந்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். நான்கு ஆண் நீதிபதிகள் ஒரு பெண் நீதிபதி என 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நான்கு ஆண் நீதிபதிகளும், பெரும்பான்மையான தீர்ப்பாக பாலின ரீதியில் பாகுபாடு காட்டக்கூடாது எனவும் அதே வேளையில் ஒற்றை பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா அரசியலமைப்பின் 25-ஆம் பிரிவின் கீழ் உறுதி அளிக்கப்பட்ட மத சுதந்திரத்திற்காக குரலை உயர்த்தியுள்ளார்.
விதி 3 (ஆ), கேரள இந்து பொது வழிபாட்டு இடங்கள் (நுழைவு அங்கீகரித்தல்) விதிகள், 1965(Kerala Hindu Places of Public Worship (Authorisation of Entry) Rules, 1965) என்கிற இந்த விதியை தான் பெரும்பான்மையான தீர்ப்பு தாக்கியுள்ளது. இந்த விதியின் அடிப்படையில் இக்கோவிலின் வழிபாட்டு தெய்வம் பிரம்மச்சாரியாக இருப்பதால் மாதவிடாய் பருவத்திற்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது .
இந்த அமர்வின் ஆண் நீதிபதிகளான தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் அவருடன் ஆர்.நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் சம உரிமை குறித்த உபதேசித்த வேளையில் ஒற்றை பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா, மத அடிப்படையிலான விஷயங்களை நோக்குகிற போது பகுத்தறிவு பார்ப்பது முற்றிலும் வீண் என ஓர் எளிமையான உண்மையை அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.
ஆழமான மத உணர்வுகளுக்குள் நீதிமன்றம் ஒரு போதும் குறுக்கிடக்கூடாது என்றும் இத்தனை நாளும் அங்கு வழிப்பட்டு தெய்வமாய் இருக்கும் சுவாமி ஐயப்பன் பிரம்மசாரியராக இருக்கு காரணத்தால் அஸ்தலத்தை சுற்றியுள்ள பழக்க வழக்கங்கள் அரசியல் சாசனம் பிரிவு 25-யின் கீழ் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது என்பதையும் வலியுறுத்தினார்.
பிரிவு 25 பல வகையிலும் இதனால் வரை இருந்து வந்த தடைக்கு அரணாக இருந்து செயல்பட்ட போதும், இத்தனை நாளும் சபரிமலையில் கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கங்கள் இந்த வரையரையை ஒத்து சுதந்திரமான மனசாட்சியின் அடிப்படையில் நிகழ்ந்ததா? இல்லையா என்பதே இங்கே எழும் வாதம். அதில் பெரும்பான்மையான நீதிபதிகள் இல்லை என்றும், நீதிபதி மல்ஹோத்ரா மட்டுமே அது அந்த வரையின் அடித்தொட்டே நிகழ்ந்து வந்தது என்றும் கூறியுள்ளனர்.
விதி 3 (ஆ), கேரள இந்து பொது வழிபாட்டு இடங்கள் (நுழைவு அங்கீகரித்தல்) விதிகள், 1965(Kerala Hindu Places of Public Worship (Authorisation of Entry) Rules, 1965) என்கிற இந்த விதியை தான் பெரும்பான்மையான தீர்ப்பு தாக்கியுள்ளது. இந்த விதியின் அடிப்படையில் இக்கோவிலின் வழிபாட்டு தெய்வம் பிரம்மச்சாரியாக இருப்பதால் மாதவிடாய் பருவத்திற்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது .
இந்த அமர்வின் ஆண் நீதிபதிகளான தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் அவருடன் ஆர்.நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் சம உரிமை குறித்த உபதேசித்த வேளையில் ஒற்றை பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா, மத அடிப்படையிலான விஷயங்களை நோக்குகிற போது பகுத்தறிவு பார்ப்பது முற்றிலும் வீண் என ஓர் எளிமையான உண்மையை அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.
ஆழமான மத உணர்வுகளுக்குள் நீதிமன்றம் ஒரு போதும் குறுக்கிடக்கூடாது என்றும் இத்தனை நாளும் அங்கு வழிப்பட்டு தெய்வமாய் இருக்கும் சுவாமி ஐயப்பன் பிரம்மசாரியராக இருக்கு காரணத்தால் அஸ்தலத்தை சுற்றியுள்ள பழக்க வழக்கங்கள் அரசியல் சாசனம் பிரிவு 25-யின் கீழ் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது என்பதையும் வலியுறுத்தினார்.
பிரிவு 25 பல வகையிலும் இதனால் வரை இருந்து வந்த தடைக்கு அரணாக இருந்து செயல்பட்ட போதும், இத்தனை நாளும் சபரிமலையில் கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கங்கள் இந்த வரையரையை ஒத்து சுதந்திரமான மனசாட்சியின் அடிப்படையில் நிகழ்ந்ததா? இல்லையா என்பதே இங்கே எழும் வாதம். அதில் பெரும்பான்மையான நீதிபதிகள் இல்லை என்றும், நீதிபதி மல்ஹோத்ரா மட்டுமே அது அந்த வரையின் அடித்தொட்டே நிகழ்ந்து வந்தது என்றும் கூறியுள்ளனர்.