பா.ஜ.க-வுக்கு வாக்களித்த முஸ்லீம் பெண்ணுக்கு சரமாரி அடி, உதை !! கணவன் மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு !!

பா.ஜ.க-வுக்கு வாக்களித்த முஸ்லீம் பெண்ணுக்கு சரமாரி அடி, உதை !! கணவன் மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு !!

Update: 2019-05-06 17:54 GMT

ஜார்கண்ட் மாநிலம், சந்ஹோ மாவட்டம் ராஞ்சியை சேர்ந்தவர் கூடுஸ் அன்சாரி. இவர் மனைவி பெயர் சஹானா கடூன். சென்ற ஏப்ரல் 29 ந்தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் சஹானா கடூன் வாக்களித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். 
அப்போது அவருடைய  கணவர், மைத்துனர் ஒசாமா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நீ யாருக்கு வாக்களித்தாய் என்று கேட்டுள்ளார்கள். 
அதற்கு மோடி அரசின் கொள்கைகள் பிடித்திருக்கிறது. அதனால் இப்போதுள்ள அரசு தொடர வேண்டும் என்பதற்காக தாமரைக்கு வாக்களித்ததாக உண்மையை கூறியுள்ளார். தன்னுடன் வந்த மற்ற பெண்களும் அவ்வாறே வாக்களித்ததாக அவர் கூறியதும் குடும்பத்தில் உள்ள அனைவரும் கோபமடைந்தனர். நீ முஸ்லிம்  சமுதாயத்துக்கே துரோகம் செய்துவிட்டாய் எனக் கூறி ஆளுக்கு ஒரு பிரம்பு எடுத்து நைய புடைத்துவிட்டனர்.   


வலியுடன் குழந்தைகளுடன் அருகே உள்ள பந்த்ரா கிராமத்தில் வசிக்கும் தாய் வீடு சென்ற அவர் சென்ற 4 ந்தேதி தனது சொந்த ஊருக்கு வந்து காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  கணவர் உட்பட அனைத்து குடும்ப உறுப்பினர்கள் மீதும் புகார் அளித்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர ரசக் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.


Similar News