தி.மு.க IT wingல் பணியாற்றிய கருப்பர் கூட்டம் செந்தில்! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
தி.மு.க IT wingல் பணியாற்றிய கருப்பர் கூட்டம் செந்தில்! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட வழக்கில் கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனலைச் சேர்ந்த செந்தில் வாசன், சுரேந்தர் நடராஜன், குகன் மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் செந்தில் வாசனை விசாரிப்பதற்காக காவலில் எடுக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரிய செய்தி வெளியானது.
இவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பே சமூக ஊடகங்களில் பலரும் இவர்களது பின்னணியை ஆராய்ந்து தி.மு.கவுடன் உள்ள தொடர்பை புகைப்படங்களுடன் நீரூபித்தனர். செந்தில் வாசன் தி.மு.க ஐடி விங் தலைவர் பிடிஆர்பி தியாகராஜனுடன் செந்தில் வாசன் இருக்கும் புகைப்படங்களும், தி.மு.க ஐடி விங் ஆட்களுடன் இருக்கும் படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகின.
மேலும் தொகுப்பாளர் சுரேந்தர் நடராஜன் தி.மு.கவுக்கு தேர்தல் பரப்புரை செய்த புகைப்படமும் தி.மு.கவின் கூட்டணிக் கட்சியான விசிகவின் தலைவர் திருமாவளவனுடன் இருக்கும் புகைப்படமும் கூட சமூக ஊடகங்களில் வலம் வந்தன. தி.மு.க ஆதரவாளர்கள் தி.மு.கவுக்கும் கருப்பர் கூட்டத்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று கூறி வந்த நிலையில் தற்போது காவல்துறை விசாரணையில் கருப்பர் கூட்டம் சேனலின் உரிமையாளர் செந்தில் வாசன் தி.மு.க கட்சியின் ஐடி விங்கில் பணியாற்றி வந்ததாக தெரிய வந்துள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது.